மாதொருபாகன் (புதினம்)
மாதொருபாகன் என்பது பெருமாள் முருகன் எழுதி 2010 இல் தமிழ்நாட்டில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இந்தப் புதினம் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய ஒடுக்குமுறை நிறைந்த ஒரு சமூகம் எதிர்த்து அந்த தம்பதியரை அழிப்பதையும் பற்றிய புதினக் கதை ஆகும்.[1]
மாதொருபாகன் | |
---|---|
நூல் பெயர்: | மாதொருபாகன் |
ஆசிரியர்(கள்): | பெருமாள் முருகன் |
வகை: | புதினம் |
இடம்: | இந்தியா |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 192 |
பதிப்பகர்: | காலச்சுவடு பதிப்பகம் |
பதிப்பு: | 2010 |
இந்தப் புதினத்தின் உள்ளடக்கத்தை இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும் எதிர்த்தன. இதனால் பெருமாள் முருகன் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கினார். இதனால் இவர் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகக் கூறி உள்ளார்.
மொழிபெயர்ப்பு தொகு
இந்தப் புதினம் ஆங்கிலத்தில் வன் பார்ட் ஃவுமன் (One Part Woman) என்று அநிருத்தன் வாசுதேவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வகைப்பாட்டில் 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.[2][3]
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- "மாதொருபாகன்" நாவல் சர்ச்சையும், கருத்துரிமைப் பிரச்சனைகளும்-பெட்டகம்
- ஆவணக்களரியாகும் புதினம் பரணிடப்பட்டது 2011-11-17 at the வந்தவழி இயந்திரம்
- Why Indian author Perumal Murugan quit writing - (ஆங்கில மொழியில்)