மாப்பிளா பாடல்கள்

முஸ்லீம் நாட்டுப்புற பாடல் வகை

மாப்பிளா பாடல்கள் (Mappila songs) என்பது (அல்லது மாப்பிளா பாட்டு) என்பது ஒரு முஸ்லீம் நாட்டுப்புற பாடல் வகையாகும் இது ஒரு மெல்லிசைக் கட்டமைப்பிற்குள் (இசால்), அரபு மொழியுடன் கூடிய மலையாளத்தின் பேச்சுவழக்கு மொழியில், கேரளாவில் உள்ள மலபார் நிலப்பகுதியின் மாப்பிளமார்களிடையே பாடப்பட்டு வருகிறது. [1] மாப்பிளா பாடல்கள் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கேரளாவின் கலாச்சார நடைமுறைகளுடன் நெருக்கமாகவும் இணைந்திருக்கிறது.

அஹதத்திலெ அலிபலிபிலெ மகமியாம் என்ற இசுலாமிய மாப்பிளா பாடல்

இப்பாடல்களில் பெரும்பாலும் அரபு மற்றும் மலையாளத்தைத் தவிர பாரசீகம், இந்துசுத்தானி மற்றும் தமிழ் மொழிகளில் இருந்து சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இலக்கண தொடரியல் எப்போதும் மலையாளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. [2] [3] இவர்கள் மதம், காதல், நையாண்டி மற்றும் வீரம் போன்ற கருப்பொருள்களைக் கையாளுகிறார்கள். பெரும்பாலும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு போன்றச் சந்தர்ப்பங்களில் பாடப்படுகிறது. மாப்பிளா பாட்டு இன்று மலையாள இலக்கியத்தின் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. சிலர் மலையாள இலக்கியத்தின் மிகவும் பிரபலமான கிளையாக கருதுகிறார்கள். இது கேரளாவில் உள்ள அனைத்து மலையாள சமூகங்களும் கர்நாடகாவின் பேரி பேசும் சமூகங்களும் அனுபவிக்கிறது. [4] [5] [6] [7]

வரலாறு தொகு

மாப்பிளா பாடல்கள் ஏழு நூற்றாண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளது. முதல் தேதியிட்ட படைப்பு முகைதீன் மாலை என்ற வகை கி.பி 1607 இல் காதி முகம்மதுவால் வழங்கப்பட்டது. அதன்பிறகு இந்த வகையில் ஏராளமான இலக்கியப் உருப்படிகள் தயாரிக்கப்பட்டன; ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இந்த 1600 க்கும் மேற்பட்ட பாடல்கள், முழுமையான அல்லது துண்டு துண்டாக, 1976 வாக்கில் அறியப்பட்டன எனத் தெரிய வருகிறது. பல நூற்றாண்டுகளாக, மலபார் மாப்பிளமார்களின் வாழ்க்கையில் மத மற்றும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான மாப்பிளா பாட்டு இயற்றப்பட்டது. ஆரம்ப நூற்றாண்டுகள் முதன்மையாக பக்தி படைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. காலனித்துவ சகாப்தம் பதப்பாட்டு எனப்படும் போர் பாடல் வகையால் குறிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளில் காதல் கதைப்பாடல்கள் மற்றும் திருமண பாடல்கள் முதல் தத்துவ சிந்தனைகள், கடல் பயணங்கள் மற்றும் வெள்ள சோதனைகள் வரை பல வகைகளும் வளர்ந்தன.

ஆரம்பகால படைப்புகள் தொகு

மாப்பிளாப்பாட்டில் முதன்முதலில் தேதியிட்ட படைப்புகள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை மற்றும் முதன்மையாக மாலை வகையைச் சேர்ந்தவையாகும்.

மாலைப்பாட்டு தொகு

பொதுவாக அரபி-மலையாள எழுத்துக்களில் எழுதப்பட்ட மாப்பிளா பாடல்களின் மாலை வகை, உயர் ஆன்மீக செல்வாக்கை பெற்றதாகக் கருதப்பட்ட இசுலாத்தின் பக்தியுள்ள ஆளுமைகளைப் பாராட்டுகிறது. பொதுவாக, இதுபோன்ற பெரும்பாலான படைப்புகள் சூஃபி புனிதர்களின் (ஆலியா) வாழ்க்கையில் கருப்பொருளாக இருந்தன. இந்த பாடல்களில் பெரும்பாலானவை இந்த புனிதர்களின் "தெய்வத் தன்மையுள்ள" செயல்களை விவரிக்கின்றன. மாப்பிளமார்களிடையே சூபித்துவம் வலுவான இடத்தைப் பெற்ற சகாப்தத்தில் பாடல்கள் பிரபலமடைந்தன. ஒவ்வொரு மாலாவும் பெரும்பாலும் தரிகாத் என்று அழைக்கப்படும் ஒரு சூபி ஒழுங்கின் தலைவருடன் ஒத்திருந்தது. அவர் கவிதைகளில் ஏராளமாக புகழப் பட்டார். பெரும்பாலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்கிறார். இவற்றில் பிரபலமானவை முகைதீன் மாலை, இரிபாய் மாலை, சாதுலி மாலை, அச்மீர் மாலை மற்றும் நபீசாத் மாலை போன்றவை. இவை ஒவ்வொன்றும் அந்தந்த சூபி கட்டளைகளுடன் ஒத்திருந்தன. கடைசியாக எகிப்தின் சூபி துறவி நபீசதுல் மிச்சிரியாவைப் பற்றியது, பொதுவாக சயீதா நபீசா என்று அழைக்கப்படுகிறது. [6] [8] [9] [10]

17 ஆம் நூற்றாண்டு மாலாப்பாட்டு வகையின் பிற பிரபலமான படைப்புகளின் தொகுப்பைக் கண்டது. அதாவது அகமதுல் கபீரின் இரிபாய் மாலை (1623), உச்வத் மாலை (1628) மற்றும் மனந்தகத் குன்கிகோய தங்கல் எழுதிய வலியா நசீகத் மாலை (1674). [4]

மாப்பிளாப்பாட்டில் பெண்கள் தொகு

மாப்பிளாப்பாட்டுவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களில் பல்வேறு வழிகளில் மாப்பிளா பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். மாப்பிளப்பாட்டு இலக்கியத்தில் பெண் கவிஞர்களின் இருப்பு மலையாள இலக்கியத்தில் முதல் பெண் இருப்பை நீண்ட காலத்திற்கு முன்பே முன்வைத்தது. ஏராளமான மாப்பிளா பாடல்களும் பெண் பாடங்களை அவற்றின் முக்கிய கருப்பொருளாகக் கொண்டிருந்தன. [11] [12]

குறிப்புகள் தொகு

  1. "Preserve identity of Mappila songs". Chennai, India: தி இந்து. 2006-05-07 இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107014307/http://www.hindu.com/2006/05/07/stories/2006050719690300.htm. பார்த்த நாள்: 2009-08-15. 
  2. Pg 288-289, Mappila Muslims of Kerala: a study in Islamic trends, Roland E. Miller,Orient Longman, 1992
  3. "History of Malayalam Language". google.com.
  4. 4.0 4.1 Pg 7-14, Mappilappattu - Padhavum Padhanavum ( Mappila songs - Study and Lessons) - Balakrishnan Vallikkunnu and Dr. Umar Tharamel, D.C. Books, 2006
  5. Pg 145, Social and cultural history of Kerala, A. Sreedhara Menon,Sterling, 1979
  6. 6.0 6.1 Pg 38-39, Kerala folk literature,Kerala Folklore Academy, 1980
  7. "Mappila Pattukal". facebook.com.
  8. Pg 25-27, Mappilappattu - Padhavum Padhanavum ( Mappila songs - Study and Lessons) - Balakrishnan Vallikkunnu and Dr. Umar Tharamel, D.C. Books, 2006
  9. Pg 144, Muslims of Kerala: a modern approach,S. Sharafudeen,Kerala Historical Society, 2003
  10. Pg 40-41,Mappila Muslims: a study on society and anti colonial struggles By Husain Raṇdathaṇi, Other Books, Kozhikode 2007
  11. Pg 172, Kerala Muslims: a historical perspective - Asgharali Engineer, Ajanta Publications, 1995
  12. Pg 21-22, and Pg 133-144 Mappilappattu - Padhavum Padhanavum ( Mappila songs - Study and Lessons) - Balakrishnan Vallikkunnu and Dr. Umar Tharamel, D.C. Books, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிளா_பாடல்கள்&oldid=3884713" இலிருந்து மீள்விக்கப்பட்டது