மா. சண்முகசிவா

மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்

மா. சண்முகசிவா (பிறப்பு: அக்டோபர் 25 1950) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'பத்தாங்கட்டை பத்துமலை' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் பொது மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் "அகம்" எனும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1970 தொடக்கம் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வரும் இவரொரு முன்னணிச் சிறுகதையாசிரியரும், புத்திலக்கிய விமர்சகரும், புதுக்கவிதையாசிரியருமாவார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் 'சலங்கை' இதழிலும் இடம்பெற்றுள்ளது. அதேவேளை, இலண்டன் பி.பி.சி தமிழோசையில் மலேசியத் தமிழர் குறித்துக் கருத்துரைகளையும் ஆற்றியுள்ளார்.

கேள்வி - பதில் பகுதி தொகு

"மலேசிய நண்பன்" இதழில் மருத்துவம் பற்றிய இலக்கியம் கலந்த சுவையான கேள்வி-பதில் பகுதியை எழுதி வருகின்ற இவர், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புத்திலக்கியப் படைப்பு வழிகாட்டிக் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்.

நூல்கள் தொகு

  • "வீடும் விழுதுகளும்" (சிறுகதைகள் - 1998)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._சண்முகசிவா&oldid=3224271" இலிருந்து மீள்விக்கப்பட்டது