மெகுதி நவாசு ஜங்
நவாப் மெகுதி நவாசு ஜங் (Nawab Mehdi Nawaz Jung) (23 மே 1894 - 28 சூன் 1967) இவர் ஓர் இந்திய அதிகாரத்துவவாதியாவர். இவர், ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது நிர்வாக சபையின் செயலாளராகவும் இருந்தார். [1] 1960-1965 வரை குசராத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
நவாப் மெகுதி நவாசு ஜங் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||
பிறப்பு | சையது முகமது மெகுதி மே 23, 1894 தார்-உல்-சிபா, ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா, இந்தியா) | ||||||||||||||||
இறப்பு | 28 சூன் 1967 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா (தற்போதைய தெலங்காணா, இந்தியா) | (அகவை 73)||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
மற்ற பெயர்கள் | பாபா மிலன் | ||||||||||||||||
பணி | அதிகாரத்துவமும் அரசியல்வாதியும் | ||||||||||||||||
அறியப்படுவது | சமூக பணி, கூட்டுறவு இயக்கம் மற்றும் சுகாதாரப் பணிகள். | ||||||||||||||||
விருதுகள் | பத்ம விபூசண் | ||||||||||||||||
|
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இவரது வீடு 'பஞ்சாரா பவன்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐதராபாத்தின் மிகவும் அழகிய பகுதியாகும். [2] [3]
ஆரம்ப கால வாழ்க்கைதொகு
இவர், ஐதராபாத்தின் தெற்குப்பகுதியான தார்-உல்-சிபா என்ற இடத்தில் மௌல்வி சையத் அப்பாசு அலி என்பவருக்கு ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். [4]
தொழில்தொகு
ஐதராபாத் மாநகராட்சியின் முதல் ஆணையாளராகவும் இவர் இருந்தார். இவர், ஐதராபாத் தொகுதியிலிருந்து 1952 இல் ஒரு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். 1952 முதல் 1960 சனவரி வரை, முன்னாள் ஐதராபாத் மாநிலத்திலும் பின்னர் ஆந்திர மாநில அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். பொதுப்பணித்துறை, சாலைகள் மற்றும் கட்டிடத் துறை, நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் போன்ற பல்வேறு இலாகாக்களை கவனித்து வந்தார். [5]
இந்திய சமூக நல அமைப்பின் முதல் தலைவராக இருந்தார். நிலூஃபர் மருத்துவமனை, மெகுதி நவாசு ஜங் புற்றுநோயியல் நிறுவனம் போன்ற முதல் அரசு புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இது, கேடயச் சுரப்பி புற்றுநோய்களில் ரேடியோ-அயோடின் நீக்கம் பயன்படுத்துவதில் முன்னோடி மருவத்துமனைகளில் ஒன்றாகும். இது பிராந்திய புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். தற்போது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு நிதியளிக்கப்படுகிறது. [6]
சொந்த வாழ்க்கைதொகு
இவர், நவாப் அகீல் ஜங் என்பவரின் மகள் தாகிரா பேகம் என்பவரை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.
இவர் அகமதாபாத் (குசராத்து) மையத்தில் சமூகத்திற்காக ஒரு கலையரங்கத்தை நிறுவினார், அதற்கான நிலம் நானாவதி குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. குசராத்தின் ஆரம்ப கட்டத்தில் தனி மாநிலத்தைப் பெற்ற பின்னர் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன. அரங்கத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.
நினைவுதொகு
ஐதராபாத்தில் உள்ள மெகுதி பட்டினம் என்ற ஊருக்கு இவரது பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Hyderabad's heritage Rock House razed to set up club". The Times of India (2011-08-16).
- ↑ "HMDA blames GHMC for heritage buildings razing". CNN IBN (2011-08-17).
- ↑ "HMDA halts Banjara Bhavan demolition". The Times of India (2011-08-17).
- ↑ "Former Vice Chancellors".
- ↑ "Raj Bhavan". Rajbhavan.gujarat.gov.in. மூல முகவரியிலிருந்து 2012-03-31 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "The man who gave Hyderabad its 'Banjara Hills', Nawab Mehdi Nawaz Jung". The News Minute. 2015-09-09. https://www.thenewsminute.com/article/man-who-gave-hyderabad-its-banjara-hills-nawab-mehdi-nawaz-jung-34143.