மேற்கதுவாய்

ஒரு வகை தொடை விகற்பமாகும்

மேற்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு தொகு

செய்யுளின் அடியில் ஈற்றுச்சீரைத்தவிர 1, 3 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெறின் மேற்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்ப வகைகள் தொகு

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. மேற்கதுவாய் மோனைத் தொடை
  2. மேற்கதுவாய் இயைபுத்தொடை
  3. மேற்கதுவாய் எதுகைத்தொடை
  4. மேற்கதுவாய் முரண் தொடை
  5. மேற்கதுவாய் அளபெடைத்தொடை

எடுத்துக்காட்டுகள் தொகு

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா" (நல்வழி, ஔவையார்)

மேற்கண்ட செய்யுளில் முதலடியில் முதல், மூன்றாம் மற்றும் நான்காம் சீர்கள் 'ப' கொண்டு தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் மேற்கதுவாய் மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கதுவாய்&oldid=2132863" இலிருந்து மீள்விக்கப்பட்டது