ராம் குமார் கேரோலி

இந்திய இதயநோய் மருத்துவர்

ராம் குமார் கேரோலி (Ram Kumar Caroli) என்பவர் ஓர் இந்திய இதய நோய் மருத்துவர் ஆவார்.[1] புதுதில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவ மனையில் இருதய நோய் பிரிவின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இந்திய இதய நோயியல் கழகத்தின் உறுப்பினராக இருந்த இவர், சவகர்லால் நேரு , லால் பகதூர் சாசுத்திரி போன்ற தலைவர்களுக்கும் மற்றும் நான்கு குடியரசு தலைவர்களுக்கும் இதயநோய் மருத்துவ ஆலோசகராக பணிபுரிந்தார்.[2] 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு நான்காவது மிக உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கி இவரை சிறப்பித்தது. மேலும் மூன்றாவது குடிமகன் விருதான பத்ம பூசன் விருதையும் இந்திய அரசாங்கம் ராம் குமாருக்கு 1974 ஆம் ஆண்டு வழங்கி பெருமைப் படுத்தியது.[3]

ராம் குமார் கேரோலி
Ram Kumar Caroli
பிறப்புஉத்தரப் பிரதேசம், இந்தியா, புலந்தசகர்
பணிஇதய நோய் மருத்துவர்
விருதுகள்பத்ம பூசண்
பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. "Help Medoc". Help Medoc. 2015. பார்க்கப்பட்ட நாள் May 12, 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "The Hindu". The Hindu. 9 December 2006. பார்க்கப்பட்ட நாள் May 12, 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_குமார்_கேரோலி&oldid=3569585" இலிருந்து மீள்விக்கப்பட்டது