ரொட்டிப் பண்டிகை

நெல்லூரில் உள்ள பாரா ஷஹீத் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் மூன்று நாள் உர்ஸ் (திருவிழா)

ரொட்டிப் பண்டிகை அல்லது ரொட்டியான் கி ஈத் அல்லது ரொட்டெலா பண்டுகா என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூரில் உள்ள பாரா ஷஹீத் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் மூன்று நாள் உர்ஸ் (திருவிழா) ஆகும். [1] [2] முஹர்ரம் மாதத்தில் கரபாலா போரில் வீரமரணம் அடைந்த 12 போர்வீரர்களின் உடல்கள் இந்த வளாகத்தில் புதைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை நினைவு கூறும் படிக்கு ஆண்டுதோறும்  இந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. கோவிலுக்குச் செல்லும் பெண்கள், நெல்லூர் ஏரியில் தங்கள் ரொட்டிகளை (தட்டையான ரொட்டிகளை) பரிமாறிக்கொள்வார்கள். [3]

நெல்லூர் ஸ்வரணா தொட்டியில் இந்து-முஸ்லிம் பெண்கள் ரொட்டி பரிமாறும் யாத்ரீகர்கள்
நெல்லூரில் உள்ள ஸ்வரனா தொட்டியில் பெண்கள்-யாத்ரீகர்கள் ரொட்டி பரிமாறுகிறார்கள்
சம்தானா ரொட்டி பரிமாற்றம் இடம் ஸ்வரனா தொட்டி, நெல்லூர்
நெல்லூர் ஸ்வரனா தொட்டியில் ரொட்டி பரிமாறும் இடம்


ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டு தளங்களில் இதுவும் ஒன்றாகும், பல்வேறு இசுலாமிய திருவிழாக்களின் போது இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பல்வேறு பிரபலங்கள், நாடு முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வருடந்தோறும். [4]மொஹரம் மாதத்தில் மூன்று நாள் சிறப்பாக கொண்டாடப்படும் ரொட்டி திருவிழாவும் அத்தகையதே.

ஏராளமான பக்தர்கள் தங்கள் உடல்நலம், வாழ்க்கை, திருமண தாமதம் போன்றவற்றில் இருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனைகளுடன் வந்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் அருகில் உள்ள குளத்தில் ரொட்டி படைத்து வழிபடும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பிரார்த்தனையுடன் வருபவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் போது அந்த ரொட்டிகளை எடுத்து வந்து கொடுப்பதும் வழக்கம். பாரா சாகித் தர்காவில் சந்தன கொண்டாட்டங்கள் ரொட்டேலா பந்துகா என்றும் அழைக்கப்படுகின்றன, இது ரொட்டியோன் கி ஈத் என்று உருது மொழியில் அழைக்கப்படுகிறது, அதாவது இஸ்லாமிய சொற்களில் ரொட்டிகளின் திருவிழா. தர்காவில் இந்த திருவிழாவின் போது செய்யப்படும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற அதீத நம்பிக்கை பலருக்கும் உள்ளது. [5]

பார்வையாளர்கள் தங்களின் ரொட்டியை தங்களுக்கு ஒத்த விருப்பமுள்ளவர்களுடன் பரிமாறிக்கொள்வதோடு, தர்காவில் ஃபாத்திஹாவும் நிறைவேற்றப்பபடும். [6] உர்ஸ் (பண்டிகை) காலத்துக்குக் காலம் உருவாகி, சூஃபித்துவத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Stage set for Rottela panduga | Deccan Chronicle". www.deccanchronicle.com. Archived from the original on 2011-12-06.
  2. "The Hindu : Andhra Pradesh / Nellore News : Festival of rotis concludes". www.hindu.com. Archived from the original on 8 February 2008. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  3. http://www.mana-andhra.com/?p=41027 రొట్టెల పండుగ కు రాష్ట్ర స్థాయి గుర్తింపు
  4. The Hindu : Andhra Pradesh / Nellore News : Rottela Panduga: 3 lakh people to take part
  5. [1]
  6. The Hindu : Andhra Pradesh / Nellore News : Festival of rotis concludes
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்டிப்_பண்டிகை&oldid=3663481" இலிருந்து மீள்விக்கப்பட்டது