வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/22

ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (ICC World Test Championship) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடத்தப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இதன் முதல் பதிப்பு 1 ஆகத்து 2019இல் தொடங்கி 14 சூன் 2021 வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களிலும் தலா ஒரு போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஐசிசி எட்டியுள்ளது .

முதலில் 2013 வாகையாளர் கோப்பைக்குப் பதிலாக இத்தொடரை நடத்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பிறகு சூன், 2017இல் மீண்டும் இந்தத் தொடரை நடத்துவதற்கான முயற்சியும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக 2017 வாகையாளர் கோப்பை நடைபெற்றது. பிறகு அக்டோபர் 2017இல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைத் தொடரை நடத்த தனது உறுப்பு அணிகள் ஒப்புக்கொண்டதாக ஐசிசி அறிவித்தது. அதன்படி 9 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இதன் முதல் பதிப்பு 1 ஆகத்து 2019இல் ஆஷஸ் தொடருடன் தொடங்கியது; இரண்டாம் பதிப்பு சூலை 2021 முதல் சூன் 2023 வரை நடைபெறவுள்ளது.