வலைவாசல்:பரதநாட்டியம்/சிறப்புக் கட்டுரை/2


நாட்டியப் பெண்

ருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904 - பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். பத்ம பூசண் விருது, காளிதாஸ் சம்மான் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.இவர் கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார்.