விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 30, 2009

{{{texttitle}}}

படத்தில் காட்டப்பட்டுள்ளது ஆப்கானித்தானின் கந்தகார் நகருக்கருகில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப்புயலின் தோற்றமாகும்.
புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும். காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படல் புழுதிப்புயல் எனப்படுகிறது. புழுதிப்புயல் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது மேலும் மேற்பரப்பு மண் அடித்துச் செல்லப்படுவதால் அப்பகுதியில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. புவிக்கு மேலதிகமாக செவ்வாயிலும் புழுதிப்புயல்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்