விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 28, 2010

{{{texttitle}}}

ரூத்து என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறும் நூல்களில் ஒன்றாகும். இந்நூலின் நடை ஒரு புனைவுரை போல் அமைந்துள்ளது. இரண்டு கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை "ரூத்து" என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது. 1530/40 களில் வரையப்பட்ட ”போவாசின் வயலில் நகோமியும் ரூத்தும்” என்ற இப்படிமம் வியென்னா கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்