விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 15, 2015

மைசூர் அரண்மனை இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது. 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பதினைந்து ஆண்டு கால முடிவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கு ஆன செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய் ஆகும். இது தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி, மாட மாளிகை, கூட கோபுரங்கள் என கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், வேட்டை அறை, படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்