விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 21, 2011

  • நாச்சோ (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.
  • 1969 இல் எழுதப்பட்ட கந்தன் கருணை நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.
  • வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை ஷபாத் (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.
  • இன்சாஸ் ரக துப்பாக்கி இந்திய சிறு படைக்கல அமைப்பால் இந்திய இராணுவத்தினர் பயன்பாட்டிற்காக 1997ல் உருவாக்கப்பட்டது.
  • இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் மிகப் பெரும்பாலானாவை பெரும் நான்கு பாம்புகள் எனப்படும் இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.