விரிசையருளிளங்குமரன்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
விரிசை அருளிளங்குமரன் என்பவர் திருநெல்வேலி மாவட்டம், விரிசம்பட்டி எனும் ஊரில் குமாரசாமி-செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக 08-02-1940 அன்று பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரசாமி என்பது. கல்லூரியில் பயின்றபோது தம் இயற்பெயரைத் தமிழ்ப்படுத்தி,'அருளிளங்குமரன்' என்று மாற்றினார்.
கல்வியும் தமிழ்ப்பற்றும் தொகு
விரிசம்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். இவருக்குப் பேராசிரியராக இருந்தவர் சி.இலக்குவனார். அப்பேராசிரியர் இவருக்கு இட்ட பெயர், 'வாடாத் தமிழ் வண்ண மலர்மீது நடக்கும் வரிசை அருளிளங்குமரன்' என்பதாகும்.
ஆற்றிய பணிகள் தொகு
இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோசிக் கல்லூரியில் ஆங்கிலப் பயிற்றுநராக சேர்ந்து, பின்னர் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியில் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
நூற்பணிகள் தொகு
இவர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய போது, ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தைக்,'காதல் வானில் தேயும் நிலவு' எனும் பெயரில் மொழிபெயர்த்தார். 1966-ஆம் ஆண்டு கவிதை நடையில்- நேரிசை ஆசிரியப்பா வகையில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், 1999-இல் இவரது துணைவியாரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
பெற்ற விருதுகள் தொகு
இவரது தமிழ்ப் பணிகளையும் ஆசிரியர் பணிகளையும் பாராட்டி, தமிழக அரசு இவருக்கு 1995-ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதினை, 05-09-1997 அன்று அன்றைய தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.
மறைவு தொகு
இவர் 26-10-1997 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
உசாத்துணை தொகு
- அ.ம.சத்தியமூர்த்தி, 'தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்'-மணிவாசகர் பதிப்பகம், சென்னை-2001.