ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம்

ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம் (Sri Venkateswara Vedic University) என்பது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம். இது 2006ஆம் ஆண்டு ஆந்திர அரசினால், திருமலை திருப்பதி தேவஸ்தான (தி. தி. தே.) நிதியுதவியின் கீழ் வேத ஆய்விற்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனம்.

ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2006
துணை வேந்தர்எஸ். சுதர்சன சர்மா[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக்குழு, திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இணையதளம்www.svvedicuniversity.ac.in

வரலாறு தொகு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1992ல் ஸ்ரீ வெங்கடேசுவரா வேத பல்கலைக்கழகத்தினை திருப்பதியில் துவக்க முடிவு எடுத்தன் அடிப்படையில் இது தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திராவின் ஆளுநராக 2006 ஜனவரியில் ராமேஸ்வர் தாக்கூர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, செயல்முறையைத் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டம் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.[2]

புலங்கள் தொகு

இந்த நிறுவனத்தில் ஏழு புலங்கள் உள்ளன:[3]

  • வேத அத்யாயன பீடம்
  • ஆகம அத்யாயன பீடம்
  • பரோஹித்ய அத்யாயன பீடம்
  • வேதாபஷ்ய பீடம்
  • வேதங்க பீடம்
  • ஆராய்ச்சி மற்றும் பதிப்புத்துறை
  • நவீன பாடங்களின் துறை

மேற்கோள்கள் தொகு

  1. "Vice Chancellor Message". www.svvedicuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  2. "Establishment of Sri Venkateswara Vedic University". Sri Venkateswara Vedic University. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  3. "Faculties and Departments". Sri Venkateswara Vedic University. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.

வெளி இணைப்புகள் தொகு