ஹென்றி மொங்க்-மேசன் மூர்
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் (Sir Henry Monck-Mason Moore, 1887–1964) என்பவர் சியேரா லியோனி, கென்யா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றியவர்.
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் Sir Henry Monck-Mason Moore | |
---|---|
இலங்கையின் 1வது மாகாதேசாதிபதி | |
பதவியில் பெப்ரவரி 4, 1948 – சூலை 6, 1949 | |
அரசர் | ஆறாம் ஜோர்ஜ் அரசர் |
பின்வந்தவர் | ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், சோல்பரி பிரபு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1887 |
இறப்பு | 1964 |
தொழில் | குடிமுறை அரசுப் பணியாளர் |
ஹென்றி மூரின் தந்தை வண. எட்வார்ட் வில்லியம் மூர் என்பவர். விம்பிள்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் ஜீசசு கல்லூரியிலும் கல்வி கற்று 1909 ஆம் ஆண்டில் வெளியேறினார். இரண்டாம் உலகப் போரின் போது கிரேக்கத்தின் சலோனிக்கா என்ற இடத்தில் லெப்டினண்ட் ஆகப் பணியாற்றினார்.
1934 முதல் 1937 வரை சியேரா லியோனியில் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றிய பின்னர், 1940 ஆண்டு வரை லண்டனில் அரசுப் பணிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1940 முதல் 1944 வரை கென்யாவின் ஆளுநராகவும், 1948 வரை இலங்கையின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
மேற்கோள்கள்தொகு
- Hankinson, C. F. J. (ed.) Debrett's Baronetage, Knightage and Companionage, 1954, Odhams Press, 1954