2011 உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

2011 உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் மையக் கருப்பொருள் தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் என்பதாகும். இந்த மாநாடு "உலகம் முழுவதும் பரந்த அளவிலும் ஆழமான வேர்களுடனும் பரவியிருக்கும் தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை பருந்துப் பார்வையில் ஆராயவும் மதிப்பீடு செய்யவும் முயல்வதாக அமைந்தது. அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா, பிரான்சு, செருமனி, இலங்கை, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.[1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு