2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம்

பிப்ரவரி 2022 இல் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம் (ஆங்கிலம்: 2022 Malaysian East Coast Floods; மலாய்: Banjir Pantai Timur Malaysia 2022) என்பது 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகும்.

2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம்
2022 Malaysian East Coast Floods
நேரம்26 பிப்ரவரி 2022 - முதல்
அமைவிடம்கிளாந்தான் மற்றும் திராங்கானு, மலேசியா
காரணம்தொடர் மழை
விளைவு
  • கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளம்
இடம்பெயர்ந்தது9 ஆயிரம் மக்களுக்கும் மேல்[1]

தீபகற்ப மலேசியாவில் குறிப்பாக கிளாந்தான் மற்றும் திராங்கானு மாநிலங்களில் பிப்ரவரி 25 முதல் பல நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் இவ்வெள்ளம் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது.[2][3]மேலும் தாய்லாந்தின் அண்டைப் பகுதிகளையும் வெள்ளம் பாதித்தது.[4]

வெள்ளத்தைத் தொடர்ந்து பல ஆயிரம் மக்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வழக்கமான வருடாந்திர வானிலை முறைகளுக்கு இணங்காத வெள்ள நேரம் காரணமாக இந்த வெள்ளம் எதிர்பாராததாகக் கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "6,327 mangsa banjir dipindahkan di Kelantan, Terengganu". Berita Harian. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  2. "Hujan sangat lebat, angin kencang mulai malam ini". Berita Harian. 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  3. "Amaran hujan berterusan tahap bahaya di Kelantan, Terengganu". Berita Harian. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  4. Davies, Richard. "Malaysia – Thousands Evacuate Floods in Kelantan and Terengganu – FloodList". floodlist.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  5. Ilham, Rosli (26 February 2022). "Banjir kali ini pelik". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.

மேலும் காண்க தொகு