அகமது நதீம் காசிமி

அகமது நதீம் காசிமி ( உருது: احمد ندیم قاسمی ) ( உருது: احمد شاہ اعوان ) ( பிறப்பு 1916 நவம்பர் 20 – இறப்பு 2006 சூலை 10) அஹ்மத் ஷா அவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஒரு உருது மொழி பாகிஸ்தான் கவிஞர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் கவிதை, புனைகதை, விமர்சனம், பத்திரிகை மற்றும் கலை போன்ற தலைப்புகளில் 50 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் சமகால உருது இலக்கியத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார். இவரது கவிதை அதன் மனிதநேயத்தால் வேறுபடுத்தப்பட்டது. இவரது உருது அஃப்சானா (சிறுகதை) பணி கிராமப்புற கலாச்சாரத்தை சித்தரிப்பதில் முன்ஷி பிரேம் சந்திற்கும் இவருக்கும் இடைவெளி சில வினாடிகள் மட்டுமே எனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் ஃபனூன் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். 1968 ஆம் ஆண்டில் 'செயல்திறன் பெருமை' மற்றும் 1980 இல் சித்தாரா-இ-இம்தியாஸ் போன்ற விருதுகளை அவர் பெற்றார்.. [1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பின்னணி தொகு

பிரித்தானிய இந்தியாவின் குஷாப் மாவட்டத்தில் அங்கா கிராமத்தில் காசிமி பிறந்தார். அவர் 1931 ஆம் ஆண்டில் காம்ப்பெல்பூரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். (இப்போது பாகிஸ்தானில் அட்டோக் நகரம் என மறுபெயரிடப்பட்டுள்ளது). அவர் அட்டோக்கின் அரசு கல்லூரியில் படிக்கும் போது தனது முதல் கவிதையை எழுதினார். பின்னர் பகவல்பூரில் உள்ள சாதிக் எகெர்டன் கல்லூரியில் பயின்றார். அவர் 1935 இல் லாகூரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு பீர்சாடா முகமது பக்ஷ் காசிமி எனற ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் தீவிர உறுப்பினரான காசிமி அதன் செயலாளராகவும் இருந்தார். இதன் விளைவாக 1950 கள் மற்றும் 1970 களில் பல முறை கைது செய்யப்பட்டார். லாகூரில் உள்ள பஞ்சாப் இருதவியல் நிறுவனத்தில் ஆஸ்துமாவால் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் 2006 ஜூலை 10 அன்று இறந்தார். [1] [2]

இலக்கிய வாழ்க்கை தொகு

ஃபூல், தெஹ்ஸீப்-இ-நிஸ்வான், அடாப்-இ-லத்தீப், சவேரா, நகூஷ் மற்றும் அவரது சொந்த பத்திரிகையான ஃபனூன் உள்ளிட்ட பல முக்கிய இலக்கிய இதழ்களில் காசிமி பதிப்பாசிரியராக பணிபுரிந்துள்ளார். [1] உருது நாளேடான இம்ரோஸின் ஆசிரியராகவும் பணியாற்றினார். காசிமி பல ஆண்டுகளாக தேசிய செய்தித்தாள்களான ராவன் தவான் மற்றும் டெய்லி ஜாங் ஆகிவற்றுக்கு வாராந்திர கட்டுரைகளை வழங்கினார். இவரது கவிதைகளில் பாரம்பரிய கசல்கள் மற்றும் நவீன உரைநடை பாணி கவிதைகள் இரண்டையும் உள்ளடக்கியுள்ளது. அகமத் நதீம் காசிமியும் பிற கவிஞர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சீர்ப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். [2]

1948 ஆம் ஆண்டில், பஞ்சாப்பிற்கான அஞ்சுமான்-இ-தராக்கி பசந்த் முசன்னிஃபீன் (முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம்) என்ற இயக்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1949 இல், அவர் பாகிஸ்தானுக்கான அமைப்பின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கதீஜா மஸ்தூர், ஹஜ்ரா மஸ்ரூர், அகமது ஃபராஸ், அம்ஜத் இஸ்லாம் அம்ஜாத், அட்டா உல் ஹக் காஸ்மி, மற்றும் முன்னு பாய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் ஆதரவோடு 1962 ஆம் ஆண்டில், காசிமி தனது சொந்த இலக்கிய இதழான ஃபனூனை வெளியிட்டார். கவிஞர் பர்வீன் ஷாகீரின் வழிகாட்டியாக காஸ்மி இருந்தார். 1974 ஆம் ஆண்டில், மேற்கு பாக்கித்தான் அரசாங்கத்தால் 1958 இல் நிறுவப்பட்ட ஒரு இலக்கிய அமைப்பான மஜ்லிஸ்-தாரகி-அடாபின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 2011 இல், பேராசிரியர் ஃபதே முஹம்மது மாலிக் மற்றும் பிரபல கட்டுரையாளர் அடா உல் ஹக் காசிமி ஆகியோர் இஸ்லாமாபாத்தின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அஹ்மத் நதீம் காசிமியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர். அவரது இலக்கியப் படைப்புகளை உருது எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோர் போற்றிப் பாராட்டியுள்ளனர்.[3]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Ahmed Nadeem Qasmi's obituary and profile Dawn newspaper, Published 11 July 2006, Retrieved 26 June 2019
  2. 2.0 2.1 A Tribute: Ahmed Nadeem Qasmi (1916-2006) All Things Pakistan, Published 16 August 2006, Retrieved 26 June 2019
  3. "Ahmad Nadeem Qasmi remembered". Pakistan Today.com.pk newspaper. 16 December 2011. http://www.pakistantoday.com.pk/2011/12/16/city/islamabad/ahmad-nadeem-qasmi-remembered/. பார்த்த நாள்: 26 June 2019. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_நதீம்_காசிமி&oldid=2867231" இலிருந்து மீள்விக்கப்பட்டது