- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இவ்விராகம் ஔடவ - வக்ர சம்பூர்ண இராகம் ஆகும்.
இதர அம்சங்கள்தொகு
- ஆரோகணத்தில் க , த வர்ஜம். இது பாஷாங்க இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் சாதாரண காந்தாரமும், கைசிகி நிஷாதமும் அன்னிய ஸ்வரங்கள்.
- திரிஸ்ருதி தைவதமும், சதுஸ்ருதி தைவதமும் இந்த இராகத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன..
- சஞ்சாரங்கள் பெரும்பாலும் மத்தியஸ்தாயியின் உத்தராங்கத்தையும், தாரஸ்தாயியின் பூர்வாங்கத்தையும் தழுவி நிற்கும்.
- வீரச்சுவை நிரம்பிய இராகம். அ _ டாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
- சென்ற நூற்றாண்டில் அடாணா அப்பய்யர் இந்த இராகத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
- திருஞானசம்பந்தர் பாடிய "யாழ்முறிப்பண்" அடாணா இராகம் எனக் கருதப் படுகின்றது.
- புரந்தரதாசர் இயற்றிய முதல் பாட்டு "மோஸஹோதெனல்லோ" என்று தொடங்கும் அடாணா இராகப் பாட்டு; தியாகராஜர் இராமதரிசனம் பெற்ற பொழுது பாடியது "ஏல நீ தயராது" என்ற அடாணா பாடல்.
- முதற்காலத்தில், கதாகாலட்சேபங்களில் தூங்குவோரை எழுப்புவதற்குப் பாகவதர்கள் அடாணா இராகத்தில், மத்திம காலத்தில் ஒரு தில்லானாவையோ வேறொரு பாட்டையோ பாடுவது வழக்கம்.
கிருதி |
தாளம் |
கலைஞர்
|
---|
மோசஹோதெனல்லோ |
ஆதி |
புரந்தரதாசர்
|
ஏல நீ தயராது |
ஆதி |
தியாகராஜர்
|
பிரஹஸ்பதே |
திரிபுடை |
முத்துஸ்வாமி தீஷிதர்
|
கனகசபாபதிக்கு |
ரூபகம் |
கோபாலகிருஷ்ண பாரதியார்
|
யாரும்மைப்போல் |
மிச்ரசாபு |
ஸ்ரீரங்கம் ரங்கசாமிப்பிள்ளை
|
கருணாசாகரா |
ஆதி |
வேதநாயகம் பிள்ளை
|
இன்னமும் இரக்கம் |
ஆதி |
நீலகண்ட சிவன்
|
அஞ்சலேன்றே |
ஆதி |
பெரியசாமித் தூரன்
|
யாரேது செய்யினும் |
ஆதி |
இலட்சுமணப் பிள்ளை
|
அப்பனும் |
ஆதி |
பாபநாசம் சிவன்
|
அனுபவகுணாம்புதி |
கண்டசாபு |
தியாகராஜர்
|
நீ இரங்காயெனில் |
ஆதி |
பாபநாசம் சிவன்
|
அடாணா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்தொகு
- யார் தருவார் இந்த அரியாசனம் :- மகாகவி காளிதாஸ்
- பால கனகமய :- சலங்கை ஒலி
இவற்றையும் பார்க்கவும்தொகுமேற்கோள்கள்தொகு
- ↑ பக்கம் எண்:210, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)