அண்ணா சதுக்கம்
அண்ணா நினைவிடம், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில், 1969ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் ஜெ. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இந்நினைவகம் விரிவுபடுத்தப்பட்டது. [1] இந்த நினைவகத்தில் பசுமையான குழந்தைகள் பூங்காவாகவும் உள்ளது. இந்நினைவகம் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களும் உள்ளன. அண்ணா சதுக்க வளாகத்தில், அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் 9 ஆகஸ்டு 2018ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. [2]

