அமுதவல்லி (திரைப்படம்)

1959 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

அமுதவல்லி - ஜூபிடர் பிக்சர்சு தயரிப்பாக 1959ல் வெளிவந்த திரைப்படம். இதில் டி. ஆர். மகாலிங்கம் கதாநாயகனாகவும், எஸ். ஏ. நடராஜன் வில்லனாகவும் நடித்தார்கள். டி. ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.[1][2][3]

அமுதவல்லி
இயக்கம்ஏ. கே. சேகர்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
திரைக்கதைஆர். இராமநாதன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். என். ராஜம்
தாம்பரம் லலிதா
ஒளிப்பதிவுஇராஜகோபால்
ஜி. கே. இராமு
படத்தொகுப்புஎஸ். பி. எஸ். வீரப்பன்
கலையகம்ஜூபிட்டர் பிக்சர்சு
வெளியீடு27 நவம்பர் 1959 (1959-11-27)
ஓட்டம்198 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இடம்பெற்ற பாடல் தொகு

டி. ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடிய பின்வரும் பாடல் மிகவும் புகழ் பெற்றது:

"ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ - குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ - நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ"

துணுக்குகள் தொகு

இத்திரைப்படம் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்த விமர்சன வரிகள்- "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்"

மேற்கோள்கள் தொகு

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails4.asp. 
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 574. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. "Amudhavalli". Archived from the original on 15 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுதவல்லி_(திரைப்படம்)&oldid=3800248" இலிருந்து மீள்விக்கப்பட்டது