அம்புலா (Ambula)(ஒடியா: ଆମ୍ବୁଲ) என்பது ஒடிசாவில் கோடைக்காலத்தில் வெயிலில் உலர்த்திய மாம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும்.[1] இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது.[2] கஞ்சி போன்ற புளிப்புச்சுவையுடைய கறிகளில் இது புளிப்பிற்காகப் பயன்படுகிறது. இதைச் சிவப்பு அல்லது பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து தயார் செய்து "பக்கலா" உடன் பரிமாறலாம்.

அம்புலா துண்டுகள்

செய்முறை தொகு

அம்புலா புளிப்புச் சுவையுடைய மாம்பழத்தினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[3] மாம்பழத்தினை நன்கு கழுவி தோலினை முதலில் அகற்றவேண்டும். பின்னர் உப்பு கலந்து பல நாட்கள் சூரிய ஒளியில் மாம்பழத் துண்டுகள் உலர்த்தப்படுகிறது. மீன் மற்றும் ஓக்ரா போன்ற பல்வேறு கறிகளில் அம்புலாவை புளிப்புச் சுவை சேர்க்கப் பயன்படுத்தலாம்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Delectable dishes of Odisha that will awaken the foodie in you". www.timesnownews.com (in ஆங்கிலம்). 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  2. Ming, Ding Choo (2014). "Memory and Local Stories: Sources of History and Knowledge". International Journal of the Malay World and Civilisation 2: 15–22. https://www.researchgate.net/publication/312169527. 
  3. "With brand tags, sweet times ahead for mango growers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
  4. "Delectable dishes of Odisha that will awaken the foodie in you". www.timesnownews.com (in ஆங்கிலம்). 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புலா&oldid=3773393" இலிருந்து மீள்விக்கப்பட்டது