அவினாசி மணி
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (ஆகத்து 2018) |
அவினாசி மணி திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அவினாசி மணி பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி ', "மிட்டாய் மம்மி', "வேடனைத் தேடிய மான்' போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். இதில் "ஜானகி சபதம்', "ஆயிரத்தில் ஒருத்தி' ஆகிய இரு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்களில் ஒருவர்தான் இன்றைய "இயக்குநர் இமயம்' பாரதிராஜா.[1]
அவினாசி மணி | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, ![]() |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட பாடலாசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ' |
தொடக்கம்தொகு
அடிமைப் பெண் படத்தில் அவினாசி மணி எழுதிய 'காலத்தை வென்றவன் நீ
காவியம் ஆனவன் நீ வேதனை தீர்ப்பவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ நீ நீ' என்ற பாடல் காலத்தை வென்று நிற்கும் பாடல்களில் ஒன்று.
திரைப்பட பட்டியல்தொகு
- ஜானகி சபதம்
- ஆயிரத்தில் ஒருத்தி
- மிட்டாய் மம்மி
- வேடனைத் தேடிய மான்
பாடலாசிரியர் பணிதொகு
- அடிமைப்பெண்
- நேற்று இன்று நாளை
- ரிக்ஷாக்காரன்
- கன்னிப் பெண்
- காக்கி சட்டை
இயற்றிய பாடல்களில் சிலதொகு
- அடிமைப்பெண்-காலத்தை வென்றவன் நீ
- பக்திப்பாடல்-கற்பூர நாயகியே கனகவல்லி
- நேற்று இன்று நாளை - அங்கே வருவது யாரோ
- ரிக்ஷாக்காரன் - கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
- கன்னிப்பெண் - ஒளிபிறந்த போது மண்ணில்
- காக்கிசட்டை - பூப்போட்ட தாவணி போதையில்