ஆய்க்குடி உலகம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆய்க்குடி உலகம்மன் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், ஆய்க்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு உலகம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி
அமைவிடம்:ஊர்மேல் அழகியோன் ரோடு, ஆய்க்குடி, கடையநல்லூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:உலகம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:செவ்வாய் கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் உலகம்மன் சன்னதியும், விநாயகர், பலிபீடம், அருள்மிக பைரவர், மாடன், மாடத்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை, சித்திரை மாதம் செவ்வாய் கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு