இடைச்செருகல்

பழமையான தமிழ் நூல்களில் பிற்காலத்தவர் தம் கருத்தைத் திணிக்கும் பாடல்களை ஆங்காங்கே சேர்த்துவிடுவதை இடைச்செருகல் என்கிறோம்.

இடைச்செருகல்கள்
  • தொல்காப்பியத்தில் சில:
    • அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.
    • மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்
    • மேலும் ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு மாற்றங்கள்

அடிக்குறிப்பு தொகு

  1. சி. கே. சுப்பிரமணிய முதலியார், செந்தமிழ் (இதழ்) தொகுதி 17 பக்கம் 345-353
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைச்செருகல்&oldid=1157689" இலிருந்து மீள்விக்கப்பட்டது