இரண்டாம் இரத்னதேவன்

இரத்தினபுரி காலச்சூரி வம்சத்தின் 6வது அரசன்

இரண்டாம் இரத்னதேவன் (Ratnadeva II; ஆட்சி. 1120-1135 பொ.ச.) நவீனகால இந்திய மாநிலமான சத்தீசுகரில் இருந்த ( இரதன்பூர், சத்தீசுகர்) இரத்தினபுரியின் காலச்சூரி வம்சத்தின் மிகப்பெரிய ஆட்சியாளனாவான். [1] திரிபுரியின் [2] காலச்சூரி ஆட்சியாளர்களிடமிருந்து]] சுதந்திரம் அறிவித்ததற்காக இவன் அறியப்படுகிறான். மேலும் காலச்சூரி மன்னன் கயகர்ணனால் அனுப்பப்பட்ட இராணுவத்தை தோற்கடித்தான்.[2] கலிங்கத்தின் வலிமைமிக்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனின் படையெடுப்பை முறியடித்ததற்காகவும் இவன் அறியப்படுகிறான். [3] இந்த நிகழ்வுகள் இவன் அநேகமாக ஒரு திறமையான இராணுவத் தலைவன் என்பதைக் காட்டுகிறது. இவனது தந்தை முதலாம் ஜஜல்லதேவன் பொ.ச.1090-1120 வரை ஆட்சி செய்தான். இவனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் பிருதிவிதேவன் பொ.ச. 1135-1165 வரை ஆட்சி செய்தான்.[4]

இரண்டாம் இரத்னதேவன்
மகாராசா
இரத்தினபுரியின் காலச்சூரியின் 6வது அரசன்
ஆட்சிக்காலம்பொ.ச.1120-1135
முன்னையவர்முதலாம் பிருதிவிதேவன் (பொ.ச. 1065-1090) அல்லது முதலாம் ஜஜல்லதேவன் (பொ.ச.1090-1120 )
பின்னையவர்இரண்டாம் பிருதிவிதேவன் (பொ.ச. 1135-1165)
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் பிருதிவிதேவன் பொ.ச. 1135-1165)
அரசமரபுஇரத்தினபுரியின் காலச்சூரி வம்சம்
தந்தைமுதலாம் ஜஜல்லதேவன் (பொ.ச. 1090-1120)

கல்வெட்டுகளும் நாணயங்களும் தொகு

இரண்டாம் இரத்னதேவனின் கல்வெட்டுகள் அகல்தாரா, பராகான், சிவ்ரிநாராயண் (அல்லது சியோரிநாராயண்), சர்கோன் (அல்லது சர்கோ) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [5] [6]

 
இரண்டாம் இரத்னதேவனின் சர்கோ தகடுகள், சேதி ஆண்டு 880, சமசுகிருத கல்வெட்டு

இரண்டாம் இரத்னதேவனின் பல நாணயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [7]

  • சனாசாரி (அல்லது சோன்சாரி): 96 தங்க நாணயங்கள்
  • சரங்கர்: 29 தங்க நாணயங்கள்
  • தாடல்-சியோனி: 136 தங்க நாணயங்கள்
  • இரதன்பூர் : 10 தங்க நாணயங்கள்
  • சோன்பூர் மற்றும் பைத்யநாதா: 9 தங்க நாணயங்கள்

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_இரத்னதேவன்&oldid=3432312" இலிருந்து மீள்விக்கப்பட்டது