கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை

(இரத்மலானை வானூர்தி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை (Colombo International Airport, Ratmalana, කොළඹ ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ, රත්මලාන) இலங்கை யின் பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது.

கொழும்பு பன்னாட்டு வானூர்தி நிலையம், இரத்மலானை
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது / இராணுவம்
உரிமையாளர்இலங்கை அரசு
இயக்குனர் AASL[1]
சேவை புரிவதுகொழும்பு
அமைவிடம்இரத்மலானை, இலங்கை
மையம்
  • ஏசியன் ஏவியேசன் சென்டர்
  • சிம்பிளிபிளை
  • தயா ஏவியேசன்[2]
  • பிட்சுஏர்
  • IWS எலிக்கொப்டர்சு[3]
  • லாக்வின் ஏவியேசன்[4]
  • ஏர் செனோக்
  • பிளை சதர்ன்
  • பெயார்வே ஏவியேசன் அக்காதமி
  • சக்குராய் ஏவியேசன்[5]
  • எலிடூர்சு
உயரம் AMSL16 ft / 5 m
ஆள்கூறுகள்6°49′19.18″N 79°53′10.35″E / 6.8219944°N 79.8862083°E / 6.8219944; 79.8862083
இணையத்தளம்Official website
நிலப்படம்
RML is located in இலங்கை
RML
RML
இலங்கையில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
04/22 6,014 1,833 ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (2016)
பயணிகள் வருகை2,336,897
வானூர்திகள் வருகை236,387
சரக்கு எடையளவு1,256 தொன்

1934ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை அரசாங்க சபை இரத்மலானையில் வானூர்தி நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி மதராசில் இருந்து வந்திறங்கியது.

இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய வானூர்திகளுக்கெதிரான பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் வானூர்திகள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது. 1946 சூன் 1 இல் இந்நிலையம் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.[6]

இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது.

விபத்துகளும் நிகழ்வுகளும் தொகு

  • 1961 நவம்பர் 15: இந்தியன் ஏர்லைன்சின் விக்கர்ஸ் விஸ்கவுன்ட் விடி-டிஐஎச் இணை விமானி தரையிறங்கும் போது தரையிறங்கு அமைப்பைத் திரும்பப் பெற்றபோது வானூர்தி பொருளாதாரப் பழுதுபார்ப்புக்கு அப்பால் சேதமடைந்தது.[7]
  • 1978 செப்டம்பர் 7 - ஏர் சிலோன் நிறுவனத்தின் ஓக்கர் சிட்லி எச்.எஸ் 748 வானூர்தி இரத்மலானை வானூர்தி நிலையத்தில் தரித்து நிற்கும் போது, வானூர்தி நிலைய சரக்கு ஏற்றும் துறையில் குண்டு வெடித்ததில், வானூர்தி தீப்பிடித்து சேதமடைந்தது.[8]
  • 1998 செப்டம்பர் 29 - பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கிப் புறப்பட்ட அன்டோனொவ் ஏஎன்-ஆர்வி லயன் ஏர் 602 பயணிகள் வானூர்தி, வட-மேற்குக் கரையில் கடலில் வீழ்ந்தது. அதில் பயணம் செய்த அனைத்து 55 பயணிகளும், பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Airport and Aviation Services (Sri Lanka) Limited". Archived from the original on 2018-11-21. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  2. "Daya Aviation".
  3. "IWS Aviation".
  4. "Lakwin Aviation".
  5. "Sakurai Aviation". Archived from the original on 2017-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  6. "Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947. 
  7. "Accident description". Aviation Safety Network. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2009.
  8. "Air Ceylon 1978 bomb incident at the Aviation Safety Network". Archived from the original on 2011-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.

வெளி இணைப்புகள் தொகு