இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.[1][2] சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.[3]

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
விளக்கம்இலக்கியத்தில் மிகச்சீரிய பங்களிப்புகள்
நாடுசுவீடன்
வழங்குபவர்சுவீடிய அக்கடமி
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்http://nobelprize.org
1901இல், சல்லி புருதோம் (1839–1907), பிரெஞ்சு கவிஞர் மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Nobel Prize in Literature". nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2007-10-13.
  2. John Sutherland (October 13, 2007). "Ink and Spit". Guardian Unlimited Books (The Guardian). http://books.guardian.co.uk/review/story/0,,2189673,00.html. பார்த்த நாள்: 2007-10-13. 
  3. "The Nobel Prize in Literature". Swedish Academy. Archived from the original on 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2007-10-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளியிணைப்புகள் தொகு