இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்

(இலங்கையின் ஆங்கிலேய தேசாதிபதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்கள் அல்லது இலங்கையின் பிரித்தானிய தேசாதிபதிகள் (British governors of Ceylon) என்போர் 1798 முதல் 1948 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை இருந்தபோது ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் அல்லது அரசியின் பிரதிநிதியாக இலங்கையை ஆட்சி செய்த அலுவலர் ஆவர்.

இலங்கை தேசாதிபதியின் கொடி

இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்து 1948 இல் முடிக்குரிய குடியரசாக ஆக்கப்பட்ட பின்னர் இப்பதவி இலங்கையில் பிரித்தானிய மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் மகா தேசாதிபதி என்ற அலுவலரால் பிரதியிடப்பட்டது. அதாவது, மகா தேசாதிபதி பிரித்தானிய மணிமுடியைப் பிரநிதித்துவப்படுத்தினாரே தவிர பிரித்தானிய அரசாங்கத்தையல்ல. 1972 இல் இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட பின்னர் மேற்படி பதவி அகற்றப்பட்டு சனாதிபதி பதவியின் மூலம் பிரதியிடப்பட்டது.

தேசாதிபதி தொகு

ஐக்கிய இராச்சியத்தின் மன்னரினால் அல்லது அரசியினால் அதன் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தேசாதிபதியே இலங்கையில் நிறைவேற்றதிகாரமுடையவராக ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதிலும் காணப்பட்டார். அவரே நிறைவேற்றுச் சபையினதும் பிரித்தானிய இலங்கையினதும் தலைவராக இருந்தார்.

தேசாதிபதியே பிரித்தானிய இலங்கையின் அதிகாரமிக்க அலுவலராக இருந்தாரெனினும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மாத்திரம் சேர் ஜெப்ரி லெய்டன் முதன்மைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு தேசாதிபதியிலும் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தராக தேசாதிபதியே இருந்தார்.

தேசாதிபதிகள் (1798–1948) தொகு

இலங்கையில் 1796 ஆம் ஆண்டே ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும் இலங்கைக்கான முதலாவது பிரித்தானியத் தேசாதிபதி 1798 ஆம் ஆண்டிலேயே நியமிக்கப்பட்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை ஆளுநரே பிரித்தானியருக்குக் கீழிருந்த இலங்கைப் பகுதிகளை நிருவகித்தார்.

இடைக்கால தேசாதிபதிகள் தொகு

மேலும் பார்க்க தொகு

குறிப்புக்கள் தொகு