இலால்சந்த் இராச்சந்த்

இந்திய அரசியல்வாதி

இலால்சந்த் இராச்சந்த் தோசி (24 அக்டோபர் 1904 - 1993) வால்சந்த் குழுவின் வாரிசும், பிரபல தொழிலதிபரும், அற்க்காரியங்களில் ஈடுபட்டவரும், சமண சமூகத் தலைவருமாவார். [1] [2]

சுயசரிதை தொகு

இவர் தனது தந்தை இராச்சந்த் தோசியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த இளைய மகனாகவும், வால்சந்த் இராச்சந்தின் சகோதரரருமாவார். இவர் மகாராட்டிராவின் சோலாப்பூரில் குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். [3] [4] குலாப்சந்த் இராச்சந்த், இரத்தன்சந்த் இராச்சந்த் ஆகிய இருவரும் இவரது சகோதரர் ஆவர்.

புனேவின் டெக்கான் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர், நவம்பர் 12, 1926 இல் லண்டனில் உள்ள மத்திய கோவிலில் அனுமதிக்கப்பட்டார். [5] ஆனால் 1928 நவம்பர் 8 அன்று பட்டியில் அழைக்கப்படாமல் விலகினார். இவர் சூன் 1931 இல் லலிதாபாய் என்பவரை மணந்தார். அவருடன் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். [2]

தொழில் தொகு

இவர் தனது சகோதரரான வால்சந்துடன் சேர்ந்து, அவரது சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட், வால்ச்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட், ராவல்கான் சர்க்கரை ஆலை, இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் போன்ற பல்வேறு குழும நிறுவனங்களில் பணிபுரிந்தார் . [3] பின்னர் இவர் இந்திய வணிகர்கள் சங்கம் உட்பட பல வணிக அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றினார். [1]

அறப்பணிகள் தொகு

1972 முதல் 1983 வரை அகில இந்திய திகம்பர ஜெயின் தீர்த்தசேத்திர குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டார். இராமாயணம் குறித்த புகழ்பெற்ற புத்தகமான தி இந்தியன் எபிக் - ராமாயணம் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். [2]

அரசியல் தொகு

இவர் 1939 இல் பம்பாய் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக ஒரு சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் 1952 முதல் 1958 வரை மாநிலங்களவையின் உறுப்பினரானார் . [6]

விளையாட்டு தொகு

ஒரு விளையாட்டு ஆர்வலரான இவர் இந்திய துடுப்பாட்டச் சங்கம், வில்லிங்டன் விளையாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஒத்த நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தார். கூடுதலாக, இவர் ஒரு தீவிர குழிப்பந்தாட்ட வீரர். குழிப்பந்தாட்ட அணிக்காக டன்லப் கோப்பையை வென்ற இவர் டென்னிசு, பூப்பந்தாட்டம், பிரிட்ஜ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் மகிழ்ந்தார். அவர் ஒரு வணிக விமான ஓட்டும் உரிமத்தையும் வைத்திருந்தார். [7]

இறப்பு தொகு

இவர் 1993 அக்டோபரில் இறந்தார். [2]

வால்ச்சந்த்நகர் நிறுவனங்கள் இப்போது இவரது மகன்களான வினோத் தோசி, சாகோர் எல். தோசி போன்றவர்களால் நடத்தப்பட்டு வருகிறது, அதேசமயம் மற்ற நிறுவனங்கள் குலாப்சந்த் இராசந்த்தின் மகன்களிடம் சென்றன. குடும்பங்களின் வணிகப் பிரிவுக்குப் பிறகு, குழுவின் நிறுவனர் வால்சந்த் இராசந்த் எந்த ஆண் வாரிசுகளும் இல்லாமல் இறந்தார் . [8]

வால்சந்த் குழுமத்தால் நடத்தப்படும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் அறங்காவலராக இருந்தார். [9]

விருதுகள் தொகு

வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிரீ விருதினை வழங்கியது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Lalchand Hirachand பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 2.2 2.3 "Jain Samaj – Seth Lalchand Hirachand". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  3. 3.0 3.1 Progressive Jains of India – Satish Kumar Jain – Google Books
  4. Business Legends – Gita Piramal – Google Books
  5. Sturgess, H.A.C. (1949). Register of Admissions to the Honourable Society of the Middle Temple. Butterworth & Co. (Publishers) Ltd.: Temple Bar. Vol. 3, p.895.
  6. Lalchand Hirachand Doshi – Member of Rajya Sabha – 1952–58
  7. "Legacy". Archived from the original on 7 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  8. Walchandnagar Industries Limited பரணிடப்பட்டது 2012-08-15 at the வந்தவழி இயந்திரம்
  9. HND Pune » About Us பரணிடப்பட்டது 2012-01-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்சந்த்_இராச்சந்த்&oldid=3593564" இலிருந்து மீள்விக்கப்பட்டது