எட்டாம் தமிழ் இணைய மாநாடு

தமிழ் இணைய மாநாடு 2009 இல் யேர்மனியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. இது உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும், கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் (Insitute of Indology and Tamil Studies, University of Cologne) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. இங்கு பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பான்மை ஆங்கிலத்தில் மட்டும் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக்கட்டுரைப் பிரிவுகள் தொகு

விமர்சனங்கள் தொகு

2009 தமிழ் இணைய மாநாடு பற்றி கடுமையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மாநாடும், ஆய்வுக் கட்டுரைகளும், மாநாட்டு வலைத்தளமும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்தது மாநாட்டின் இலக்குக்கு நேர் எதிர்மாறானது என்று கூறப்பட்டது.

மாநாடு எடுத்த பரிந்துரைகள் ஆகிய "இதழ் பிரசுரிப்பது, சென்னையில் செயலகம் நடத்துவது, விருது அளிப்பது" என எல்லாம் அரச தயவில் நடத்த வேண்டும் என்று எதிர்பாப்பது, தமிழ் இணைய மாநாடு அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கு உட்படும் என்று விமர்சிக்கப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. மாலன். (2009). தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை -ஒரு பார்வை

வெளி இணைப்புகள் தொகு