கடங்கநேரி பத்திரகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடங்கநேரி பத்திரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடங்கநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கடங்கநேரி, ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:பத்திரகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடைவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பத்திரகாளியம்மன் சன்னதியும், மாரியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

திருவிழா

இக்கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சிறப்பு விழா என்கிற பெயரில் திருவிழா நடைபெறும். புரட்டாசி மாத கொடைவிழாவில் தீ மிதித்தலும்,பங்குனி மாத கொடைவிழாவில் தோரோட்டமும் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

தேரில் பத்திரகாளி,மாரி தாய் தெய்வத்தை ஊர்வலம் எடுத்துச் செல்கிறார்கள். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)