கடற்படை
படைத்துறையில் கடலில் முதன்மையாக இயங்கும் படை கடற்படை (ⓘ) ஆகும். போர்க் கப்பல்கள், மறைவேகப்படகுகள், நீர்மூழ்கிகள், கடல்குண்டுகள், தவளைமனிதர் தாக்குதல்கள் என பலதரப்பட்ட தாக்குல் திறன்களை கடற்படை கொண்டிருக்கலாம். தமது கடற்பரப்பை பாதுகாக்க, கடல் தாண்டி தாக்க கடற்படை பயன்படுகிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/USS_Nimitz_%28Nov._3%2C_2003%29.jpg/200px-USS_Nimitz_%28Nov._3%2C_2003%29.jpg)
சங்ககாலத் தமிழகத்தில் கடற்கடை இருந்தது. நலங்கிள்ளி இதனை வைத்திருந்தான். கடலில் படை நடத்தி அள்ளிக்கொண்டுவந்த செல்வம் நாட்டில் மண்டிக் கிடந்தது. இந்தப் பெருமுயற்சியால் [நோன்தாள்] சோழநாட்டுப் பொருநன் (போராளி) என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தான். இவனிடம் குதிரைப்படையும் [இவுளி] இருந்தது. இவனைப் பாடும் புலவர் கோவூர் கிழார் நான் பொருநர் கூட்டத்துக் கலைஞன். பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன். அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று பாடுகிறார். [1] சங்ககாலக் கடல் வாணிகம் பற்றிக் கூறப்படும் செய்திகள் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கவை.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்
தொகு- ↑
கடற்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382