கட்டாய ஓய்வு (இந்தியா)
கட்டாய ஓய்வு (Compulsory Retirement) என்பது ஒரு இந்திய நடுவண் அரசு அல்லது இந்திய மாநில அரசு ஊழியர்கள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் அரசு நிர்வாகம் அளிக்கும் ஒரு வகையான கடுமையான தண்டனையாகும்.
கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர்களுக்கு, மற்ற ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படுவது போன்று, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற அனைத்து நிதிப் பலன்கள் வழக்கம் போல் வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 3500/- வழங்கப்படும். [1][2]