கனக செந்திநாதன்

இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். 1939 முதல் உபகுப்தன், பரிதி, செவ்வேல், வேல், பரதன் எனப் பல புனைபெயர்களிலும், கனக செந்திநாதன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்.[2] கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை ஈழகேசரியில் அறிமுகம் செய்து புகழ் பெற்றார்.[2] "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]

எழுத்துலகில் தொகு

சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். 1939 இல் பாரதி கண்ட சகுமி பற்றி நொள்ளைக் கதைகள் சொல்லும் கள்ளச் சகுனி என்ற முதல் கட்டுரை ஈழகேசரியில் எழுதினார்.[2] மன்னிப்பு என்ற முதலாவது சிறுகதையை 1940 எழுதினார்.<ref name="chudar"> ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

சமூகப் பணிகள் தொகு

குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார்.[3]

பட்டங்கள் தொகு

  • 1964 மே 19 இல் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது.[2]
  • 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது.

இவரது சில நூல்கள் தொகு

தளத்தில்
கனக செந்திநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • வெண்சங்கு (சிறுகதைகள்)
  • ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு)
  • வெறும் பானை (நாவல்)
  • விதியின் கை (நாவல்)
  • ஒருபிடி சோறு (நாடகம்)
  • ஈழம் தந்த கேசரி
  • கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
  • கலை மடந்தையின் தவப் புதல்வன்
  • நாவலர் அறிவுரை
  • கடுக்கனும் மோதிரமும்
  • திறவாத படலை

மேற்கோள்கள் தொகு

  1. கதிரொளியான் (20 நவம்பர் 1983). "வாழ்வும் மூச்சும் இலக்கியத்துக்காக வாழ்ந்த இரசிகமணி". ஈழநாடு. 
  2. 2.0 2.1 2.2 2.3 "கண்டோம் கருத்தறிந்தோம்". சுடர்: 8-10. சூலை 1975. 
  3. 3.0 3.1 3.2 "திரு.இரசிகமணி.கனக செந்திநாதன் அவர்கள்". குரும்பசிட்டிவெப்.கொம். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக_செந்திநாதன்&oldid=3238125" இலிருந்து மீள்விக்கப்பட்டது