கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்)

கரையைத் தேடும் கட்டுமரங்கள் கே.எஸ்.பாலச்சந்திரனால் எழுதப்பட்ட புதினம். மான்பாய்ஞ்சவெளி, புங்குடுதீவு, மயிலிட்டி, தொண்டமானாறு, கரவெட்டி ஆகிய யாழ்ப்பாணத்துக் கிராமங்களைக் களமாக கொண்ட கடலோடிகளின் கதை. வானொலி அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீட் முன்னுரை எழுதியிருக்கிறார். வடலி பதிப்பகத்தாரால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. ஓவியர் ரமணி (யாழ்ப்பாணம்) முகப்பு அட்டையை வரைந்திருக்கிறார்.

கரையைத் தேடும் கட்டுமரங்கள்
நூல் பெயர்:கரையைத் தேடும் கட்டுமரங்கள்
ஆசிரியர்(கள்):கே.எஸ்.பாலச்சந்திரன்
வகை:புதினம்
துறை:புதினம்
காலம்:2009
இடம்:சென்னை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:306
பதிப்பகர்:வடலி வெளியீடு
பதிப்பு:2009
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:கே.எஸ்.பாலச்சந்திரனின் முதலாவது புதினம்

இந்நூலுக்கு 2009 ஆம் ஆண்டின் அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது.

வெளி இணைப்புக்கள் தொகு