காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், காட்டுப்பரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:காட்டுப்பரூர், விருத்தாசலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விருத்தாசலம்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:ஆதிகேசவ பெருமாள்
தாயார்:வேதவல்லி நாச்சியார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி பெருவிழா 5ம் நாள் கருட சேவை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாள், வேதவல்லி நாச்சியார் சன்னதிகளும், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஸ்ரீபாதம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி பெருவிழா 5ம் நாள் கருட சேவை, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் வைகாசி பெருவிழா 9ம் நாள் தேர் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)