கின்னெராசனி ஆறு

இந்தியாவிலுள்ள ஓர் ஆறு

கின்னெராசனி ஆறு (Kinnerasani) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள வாரங்கல் மற்றும் பத்ராத்ரி மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் வழியாக பாயும் கோதாவரியின் முக்கியமான துணை நதியாகும். [1]

பலோஞ்சா நகரம் அருகே கின்னெராசனி ஆற்றின் மீது கட்டப்பட்ட அணை

கம்மம் மாவட்டத்தில் இந்த ஆற்றில் கின்னெராசனி அணை எனப்படும் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் பின்புற நீரானது பரந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் கின்னெராசனி வனவிலங்கு சரணாலயத்தின் கீழ் இது பாதுகாக்கப்படுகிறது. தெலுங்கானாவில் கோதாவரியின் வலது கரையில் கின்னெராசனி ஆறு ஓர் ஓடையாகப் பாய்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையில் கோதாவரி நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பு இரு மாநிலங்களுக்கிடையில் ஒரு பொதுவான எல்லையை உருவாக்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 23 October 2015. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்னெராசனி_ஆறு&oldid=3196971" இலிருந்து மீள்விக்கப்பட்டது