கிருஷ்ணா டாவின்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.
கிருஷ்ணா டாவின்சி | |
---|---|
![]() | |
பிறப்பு | வெங்கடகிருஷ்ணன் மே 7, 1968 |
இறப்பு | ஏப்ரல் 4, 2012 | (அகவை 43)
இறப்பிற்கான காரணம் | எலிக்காய்ச்சல் |
மற்ற பெயர்கள் | அகிலன் சித்தார்த், வால்பையன், கின்ஸி |
அறியப்படுவது | இதழாளர், எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | ஜெயராணி |
பிள்ளைகள் | நேயா |
சுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.
நூல்கள்தொகு
- இனிய மனது இணையும்பொழுது, மணிமேகலைப் பிரசுரம்,
- இன்னொரு முறை காதலிப்போம், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.
- ஆஷா ஒரு புதையல், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.
- காதல் சங்கிலி, மணிமேகலைப் பிரசுரம், 1996, 175 பக்கங்கள்.
- ஒரு கனவின் இசை, விகடன் பிரசுரம், ரூ.60/-
- பூவுலகின் கடைசிக்காலம், பாரதி புத்தகாலயம், சென்னை; முதற்பதிப்பு ?, 108 பக்கங்கள்; ரூ.50/-
- நான்காவது எசுடேட், குமுதம் பு(து)த்தகம், 2004, 144 பக்கங்கள், ரூ.65/-
- இசையாலானது, பாரதி புத்தகாலயம், சென்னை; 2012 ஏப்ரல்; 90 பக்கங்கள், ரூ.50/-
படைப்புகள்தொகு
நெடுங்கதைகள்தொகு
- இனிய மனது இணையும்பொழுது
- என் இனிய தமிழ்மக்களே!
- கோடையில் ஒருமின்னல்
- மாயக்குதிரை
சிறுகதைகள்தொகு
- அச்சக்காடு
- குட்டிமயில்
- காலா என் காலருகே வாடா, ஆனந்தவிகடன்
தொடர்கதைகள்தொகு
- நான்காவது எசுடேட்
கவிதைகள்தொகு
- லவ் பேர்ட்ஸ்
கட்டுரைகள்தொகு
- ஹைக்கூத் தீவுகள்
- பூட்டிய அலமாரியினுள் கவிதைப் புதையல், புதிய புத்தகம் பேசுது.
பணியாற்றிய திரைபடங்கள்தொகு
- வர்ணம் (2011)
- வயது 18 (நடிகர்)
- சித்து ப்ளஸ் டூ. தயாரிப்பு: கே.பி.ஆர். மீடியா பிரைவேட் லிமிடெட். திரைக்கதை, வசனம், இயக்கம்: கே.பாக்யராஜ். கதை: கிருஷ்ணா டாவின்சி