கில்லி கிருபா ராணி

ஆந்திராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி

டாக்டர் கில்லி கிருபா ராணி (Dr.Killi Krupa Rani) (பிறப்பு: நவம்பர் 19, 1965) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் 2009 முதல் 2014 வரை ஸ்ரீகாகுளம் தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார்.[1] இவர் 2019 இல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கில்லி கிருபா ராணி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009-2014
முன்னையவர்கின்ஜரபு யெர்ரான் நாய்டு
பின்னவர்ராம் மோகன் நாய்டு கின்ஜரபு
தொகுதிஸ்ரீகாகுளம் (மக்களவை தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புSrikakulam
19 நவம்பர் 1965 (1965-11-19) (அகவை 58)
ஸ்ரீகாகுளம், ஆந்திரா பிரதேசம்
இறப்புSrikakulam
இளைப்பாறுமிடம்Srikakulam
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்ராம் மோகன் ராவ்
பிள்ளைகள்2
பெற்றோர்
  • Srikakulam
வாழிடம்தெக்களி
தொழில்மருத்துவர், அரசியல்வாதி

தொழில் தொகு

டாக்டர் கில்லி கிருபாராணி மருத்துவ பயிற்சியாளர். ஒரு கூட்டுநராக, டாக்டர் ராம்மோகன் ராவ் அறக்கட்டளையிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக, கிராமப்புறங்களில் இலவச குடிநீர், இலவச மருத்துவ முகாம்கள், இலவச பிரசவங்கள், பார்வையற்றவர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை, வயதானவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஓய்வூதியம், திறமை சோதனைகளை நடத்துவதன் மூலமும் உதவித்தொகை வழங்குவதன் மூலமும் மாணவர்களை ஊக்குவிப்பவர்.[2] டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் பாதயாத்திரை நிறைவடைந்த தினத்தன்று இவர் அரசியலில் நுழைந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், 2009 ஆம் ஆண்டில் இவர் எம்.பி.யெரான் நாயுடுவைத் தோற்கடித்தார்.[3] இவர் 15 வது மக்களவை மற்றும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மாநில, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக சேர்க்கப்பட்டார். இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் குழு உறுப்பினராகவும், ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், வெளிவிவகார அமைச்சரவை உறுப்பினராகவும் மற்றும், மத்திய சமூக நல வாரிய உறுப்பினராகவும் செயல்பட்டார்.

இவர் 2014 ஆம் ஆண்டில் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபுவிடம் தோற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் இவர் பிப்ரவரி 28, 2019 அன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு கட்சியில் சேரப்போவதாக அறிவித்தார்.[4]

ஆர்வங்கள் தொகு

டாக்டர் கில்லி ஒரு தீவிர வாசகர் ஆவார். மேலும், இவர் இசை, வரலாறு , இலக்கியம் மற்றும் பயணம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார். நேரு குடும்பத்தின் 100 வருடங்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.[2] இவர் சிறப்புமிக்க சமூக சேவகரும் ஆவார்.

குறிப்புகள் தொகு

  1. "Profile of Members". Government of India. Archived from the original on 1 February 2013. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.
  2. 2.0 2.1 "DoT Page". DoT. Archived from the original on 6 July 2013. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
  4. "Former Union Minister Killi Kruparani meets YS Jagan". The Hans India. 19 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லி_கிருபா_ராணி&oldid=3549794" இலிருந்து மீள்விக்கப்பட்டது