குருபீடபுரம் தன்றோன்றீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குருபீடபுரம் தான்தோன்றீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், குருபீடபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:குருபீடபுரம், கள்ளக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கள்ளக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:தான்தோன்றீஸ்வரர்
தாயார்:ஶ்ரீ செளந்தர வல்லி அம்மன்
குளம்:பழமைவாய்ந்த வற்றாத கிணறு
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம்,சனி பெயர்ச்சி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டு கண்டெடுக்கப்பட்டது.இது தோன்றிய வரலாறு சுவடுகள் இல்லை.இந்த சிவன் சிலையானது விவசாயம் செய்யும்போது ஏற்கலப்பையில் சிக்கியது.இவ்வாறு இது தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றீஸ்வரர் உடனுறை ஞானசெளந்தரவள்ளி கோயில் என்று அழைக்கப்பட்டது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தான்தோன்றீஸ்வரர், செண்பகவள்ளி சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.இக்கோயில் மாத பிரதோஷம் விமர்சையாக கொண்டாடபடுகிறது.மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)