கள்ளக்குறிச்சி மாவட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
கள்ளக்குறிச்சி
மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை

கள்ளக்குறிச்சி மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கள்ளக்குறிச்சி
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
சர்வன்குமார் சடாவத்,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

பகலவன்
இ.கா.ப.
நகராட்சிகள் 3
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 6
பேரூராட்சிகள் 5
ஊராட்சி ஒன்றியங்கள் 9
ஊராட்சிகள் 412
வருவாய் கிராமங்கள் 562
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 3530.58 ச.கி.மீ.
மக்கள் தொகை
13,77,494 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
606 xxx
தொலைபேசிக்
குறியீடு

04151
வாகனப் பதிவு
TN - 15
இணையதளம் kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும்.[1] தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.[2][3][4][5]

கிரண் குராலா என்பவர் இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார்.[6]

மாவட்ட பிரிப்பு கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து திருக்கோவிலூர் தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தி ரு மிகப்பெரிய வருவாய் தரும் கோட்டமாகவும், தற்போதைய மாவட்டத்தில் 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமாகவும், பட்டு மற்றும் அரிசிக்கு பெயர் பெற்றுள்ள நகரமாக உள்ளதால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு 30.8.2019 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆரணி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 22.03.2021 ஆம் தேதி ஆரணியில் நடந்த தேர்தல் பரப்புரையில் திரு.எடப்பாடி க. பழனிசாமி அவர்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்..

புதிய வருவாய் வட்டம் கோரிக்கைதொகு

வந்தவாசி வட்டத்தில் இருந்து பெரணமல்லூர் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், ஆரணி மற்றும் போளூர் வட்டத்தில் இருந்து கண்ணமங்கலம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து துரிஞ்சாபுரம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டமும், செங்கம் மற்றும் கலசப்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து புதுப்பாளையம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டங்கள் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடையே நீண்ட நாள் கோரிக்கை உள்ளது.

மாவட்ட எல்லைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், வடக்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், மேற்கில் சேலம் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், தெற்கில் கடலூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது.[7]

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 24 குறுவட்டங்களும், 562 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [8][9][10]

 
கள்ளக்குறிச்சி மாவட்டம்

வருவாய் கோட்டங்கள்

  1. கள்ளக்குறிச்சி
  2. திருக்கோவிலூர்

வருவாய் வட்டங்கள்

  1. திருக்கோவிலூர் வட்டம்
  2. கள்ளக்குறிச்சி வட்டம்
  3. உளுந்தூர்பேட்டை வட்டம்
  4. சங்கராபுரம் வட்டம்
  5. சின்னசேலம் வட்டம்
  6. கல்வராயன்மலை வட்டம்

உள்ளாட்சி அமைப்புகள்

இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்பில் 3 நகராட்சிகளும், 5 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[11]

நகராட்சிகள்

  1. கள்ளக்குறிச்சி
  2. திருக்கோவிலூர்
  3. உளுந்தூர்பேட்டை

பேரூராட்சிகள்

  1. சின்னசேலம்
  2. தியாக துருகம்
  3. சங்கராபுரம்
  4. வடக்கநந்தல்
  5. மணலூர்ப்பேட்டை

ஊரக வளர்ச்சி அமைப்புகள்

இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களையும், 412 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[12]

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்
  2. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்
  3. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்
  4. சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்
  5. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
  6. உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
  7. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்
  8. தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம்
  9. திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (SC), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (ST), கங்கவள்ளி (SC), ஆத்தூர் (SC) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன.இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 16,82,687 ஆகும். அதில் ஆண்கள் 8,50,706 மற்றும் பெண்கள் 8,31,981 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,96,050 ஆகவுள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் சராசரி எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 10,20,833 ஆகும்.[13]

சுற்றுலாத் தலங்கள்

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu govt announces creation of Kallakurichi district". Times of india. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms. பார்த்த நாள்: 8 ஜனவரி 2019. 
  2. "கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்". https://www.maalaimalar.com/news/district/2019/11/26122502/1273260/CM-Edappadi-Palaniswami-inaugurated-Kallakurichi-new.vpf. 
  3. கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்
  4. தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது
  5. தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!
  6. செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
  7. கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்
  8. KALLAKURICHI DISTRICT Revenue Administration
  9. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  10. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  11. KALLAKURICHI DISTRICT Local Bodies
  12. KALLAKURICHI DISTRICT Development
  13. தமிழக மாவட்டங்கள் மற்றும் வருவாய் வட்ட வாரியான மக்கள்தொகை

வெளி இணைப்புகள்