குறும்பா மொழி

குறும்பா மொழி (Kurumba language) தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும்.[2] இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் குறும்பர் பழங்குடிகளால் பேசப்பட்டுவரும் மொழியாகும். இம்மொழியானது 2011 ஆண்டைய மக்கள் கணக்கீட்டின்படி 24,189 பேர்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோரிடையே தமிழ் அல்லது கன்னடம் தொடர்பில் இரு மொழித் திறமை குறைவாகவேயுள்ளது. இளம் தலைமுறையினர் 50% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இம்மொழியை எழுதுவதற்குத் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன.

குறும்பா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகள்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
24,189  (2011 கணக்கீடு)[1]
தமிழ் எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kfi

குறும்பா மொழி கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடையதென்றும், சிதைந்த கன்னடமே அம்மொழி என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் திராவிட மொழியாராய்ச்சியாளரான கால்டுவெல் இம்மொழியைச் சிதைந்த தமிழ் என்று கூறுகிறார்.[3]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
  2. "Linguistic lineage for Kurumba Kannada". பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  3. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பா_மொழி&oldid=3626733" இலிருந்து மீள்விக்கப்பட்டது