கோட்டயத்துப் போர்

கோட்டயத்துப் போர் (Cotiote War) என்பது 1793 மற்றும் 1806 க்கு இடையில் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும், கேரளாவின் கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னன் பழசி இராசாவிற்கும் இடையே நடந்த தொடர்ச்சியான போராட்டங்களைக் குறிக்கிறது.

கோட்டயத்துப் போர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பகுதி
நாள் 1793-1806
இடம் வயநாடு மாவட்டம்
ஆங்கிலேய வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கோட்டயம் இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
*ஆர்தர் வெல்லஸ்லி
  • இராபர்ட் பௌல்சு
  • ஜேம்ஸ் இசுடீவன்சன்
*பழசி இராசா 
பலம்
14000 6000

பின்னணி தொகு

பழசி ராசா தனது இராச்சியத்தின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் கிழக்கிந்திய நிறுவனம் அதை இணைக்கவும், துண்டாக்கவும் நினைத்தது. அவரது சொந்த சுதந்திர ஆசை மற்றும் கிழக்கிந்திய நிறுவனத்தின் துரோக உணர்வு அவரது நாட்டின் சுதந்திரத்தை மதிப்பதாக அவர்களின் முந்தைய வாக்குறுதியின் பேரில் அவரது பிரபுக்களான கைத்தேரி அம்பு மற்றும் கண்ணவத் சங்கரன் நம்பியார் ஆகியோரின் தொடர்ச்சியான ஆலோசனைகளுடன் சேர்ந்து, கோட்டயம் போர் வெடிக்க வழிவகுத்தது. ஆங்கிலோ-மைசூர் போர்கள், ஆங்கிலோ-மராத்தா போர்கள், ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் மற்றும் பாலிகர் போர்களை விட, இந்திய துணைக் கண்டத்தில் அவர்களின் இராணுவப் போர்களின் போது கிழக்கிந்திய நிறுவனம் நடத்திய மிக நீண்ட போர் இதுவாகும். ஆங்கிலேயப் படைகள் 10 ஆண்டுகால போரில் எண்பது சதவிகிதம் வரை இழப்புகளை சந்தித்தது. [1] [2] [3]

தொடர் சண்டைகள் தொகு

கோட்டயத்தின் இராணுவம் கரந்தடிப் போரை நடத்தியது. முக்கியமாக ஆராளம் மற்றும் வயநாட்டின் மலைக் காடுகளை மையமாகக் கொண்டிருந்தது. மேலும் மோதல்களின் பெரிய மண்டலம் மைசூரில் இருந்து அரபிக் கடல் வரை, கூர்க் முதல் கோயம்புத்தூர் வரை நீட்டிக்கப்பட்டது. 1797 இன் தொடக்கத்தில், 1800 முதல் 1801 வரையிலும், 1803 முதல் 1804 வரையிலும் போர் உச்சகட்டத்தை எட்டியது. மேலும் தொடர்ச்சியான பின்னடைவுகள் காரணமாக, பம்பாய் படைப்பிரிவுகள் திரும்பப் பெறப்பட்டன. அதற்கு பதிலாக மெட்ராஸ் படைப்பிரிவுகள் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன - (1803 இல் 8,000 முதல் 14,0800 தொடக்கத்தில் 14,0800 வரை). 1805 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நடந்த மோதலில் கோட்டயத்தின் தலைவர் பழசி ராஜா இறந்த சில மாதங்களுக்குள் இப்போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போரைத் தொடர்ந்து, கோட்டயம் இராச்சியம், சென்னை மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. [4] [5] [6]

கணக்கீடு தொகு

கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத்தில் ஆரம்பத்தில் 6,000 பேர் இருந்தனர். இது 1800 இல் 8,000 ஆகவும், 1804 இல் 14,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டது - ஆர்தர் வெல்லஸ்லி 1800 மற்றும் 1804 க்கு இடையில் போர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார். கோட்டய இராணுவ மனிதவளம் சரியாக தெரியவில்லை - மதிப்பீடுகள் 2,000 முதல் 6,000 வரை மாறுபடும். கோட்டய இராணுவம் தனது ஆயுதமாகவும் தீக்கல்லியக்கிகளை நன்கு பயன்படுத்தியது. ஆனால் 1799 க்குப் பிறகு வெடிமருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் வில் மற்றும் வாள்களை பரவலாகப் பயன்படுத்தியது. 10 ஆண்டுகால யுத்தம் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளில் 80 சதவீத இழப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அடங்குவர். ஆனால் கோட்டயத்து படைகளில் மரணம் பற்றி எந்த மதிப்பீடும் கிடைக்கவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. Modern Kerala: Studies in Social and Agrarian Relations. Mittal Publication. 
  2. "History of Madras Army Volume III". Printed by E. Keys at the Govt. Press. 1883.
  3. Kurup, KKN. 1980. Pazhassi Samarangal.
  4. Modern Kerala: Studies in Social and Agrarian Relations. Mittal Publication. 
  5. "History of Madras Army Volume III". Printed by E. Keys at the Govt. Press. 1883.
  6. Kurup, KKN. 1980. Pazhassi Samarangal.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயத்துப்_போர்&oldid=3817226" இலிருந்து மீள்விக்கப்பட்டது