சங்கர வாரியார்

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர்

சங்கர வாரியார் (Shankara Variyar) (பிறப்பு:1500-இறப்பு:1560[1]) கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். இவரது குடும்பத்தினர் தற்கால பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே உள்ள கோயிலுக்கு உதவியாளராக பணி செய்தவர்கள்.[2]

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் குரு பரம்பரை

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி பரம்பரை தொகு

கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் குருகுலம் முறையில் பயின்ற சங்கர வாரியாருக்கு நீலகண்ட சோமயாஜி (1444–1544) மற்றும் ஜேஷ்டதேவர் (1500–1575) கல்வி கற்றுக்கொடுத்தனர்.

படைப்புகள் தொகு

  • யுக்தி-தீபிகா - தந்திரசம்காரம் குறித்த விளக்க உரை
  • லகு-விருத்தி - தந்திரசம்காரம் குறித்த உரைநடையில் விளக்க உரை.
  • கிரியாகிரமகாரி - இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய லீலாவதி எனும் நூலுக்கு நீண்ட உரைநடை விளக்கம்
  • வானவியல் விளக்கம், கிபி 1529
  • வானவியல் கையேடு, 1554

மேற்கோள்கள் தொகு

  1. Joseph, George Gheverghese (2009), A Passage to Infinity: Medieval Indian Mathematics from Kerala and Its Impact, SAGE Publications India, p. 21, ISBN 9788132104810.
  2. Plofker, Kim (2009). Mathematics in India. Princeton: Princeton University Press. பக். 220, 324. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_வாரியார்&oldid=3793248" இலிருந்து மீள்விக்கப்பட்டது