சச்சீந்திர நாத் சான்யால்

சச்சீந்திர நாத் சான்யால் (Sachindra Nath Sanyal) pronunciation இவர் ஓர் இந்திய புரட்சியாளர் மற்றும் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் (1928 க்குப் பிறகு இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகம் என்றானது) நிறுவனர் ஆவார். இது இந்தியாவில் பிரிட்டிசு பேரரசிற்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. சந்திரசேகர ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாக இருந்தார்.

சச்சீந்திர நாத் சான்யால்
பிறப்பு1893
வாரணாசி, ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு7 பிப்ரவரி 1942
கோரக்பூர் சிறை, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அமைப்பு(கள்)அனுசீலன் சமித்தி, காதர் கட்சி, இந்துஸ்தான் குடியரசு இயக்கம், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு,
அரசியல் இயக்கம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவரது பெற்றோர் வங்காளிகள். [1] இவரது தந்தை ஹரி நாத் சன்யால் மற்றும் இவரது தாயார் கெரோட் வாசினி தேவி. இவர் 1893 இல் வாரணாசியில் பிறந்து ஐக்கிய மாகாணங்களில் வளர்ந்தார். பிரதிபா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தார்.  

புரட்சி வாழ்க்கை தொகு

இவர் 1913 இல் பட்னாவில் அனுசீலன் சமித்தியின் ஒரு கிளையை நிறுவினார். காதர் சதித்திட்டத்திற்கான திட்டங்களில் இவர் விரிவாக ஈடுபட்டார். 1915 பிப்ரவரியில் அது அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் மறிந்து வாழ்ந்தார். இவர் ராஷ் பிஹாரி போஸின் நெருங்கிய கூட்டாளியாவார். [2] போஸ் ஜப்பானுக்கு தப்பித்த பிறகு, இந்தியாவின் புரட்சிகர இயக்கத்தின் மிக மூத்த தலைவராக இவர் கருதப்பட்டார்.

சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவர் பந்தி ஜீவன் (சிறைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கை, 1922) என்ற தலைப்பில் தனது புத்தகத்தை எழுதினார். இவர் சிறையில் இருந்து விரைவிலேயே விடுவிக்கப்பட்டார். ஆனால் இவர் தொடர்ந்து பிரிட்டிசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, மீண்டும் அடைக்கப்பட்டார். வாரணாசியில் உள்ள இவரது மூதாதையர் குடும்ப வீடு பறிமுதல் செய்யப்பட்டது.

1922 இல் ஒத்துழையாமை இயக்கம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, [3] இவர், ராம் பிரசாத் பிசுமில் மற்றும் வேறு சில புரட்சியாளர்கள் ஒரு சுதந்திர இந்தியாவை விரும்பினர் .தங்கள் இலக்கை அடைய சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருந்தனர். 1924 அக்டோபரில் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை நிறுவினர். [4] 1924 திசம்பர் 31 அன்று வட இந்தியாவின் பெரிய நகரங்களில் விநியோகிக்கப்பட்ட தி ரெவல்யூசனரி என்ற தலைப்பில் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் அறிக்கையின் ஆசிரியராக இருந்தார். [5]

கக்கோரி இரயில் கொள்ளையில் ஈடுபட்டதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஆகத்து 1937 இல் நைனி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சதிகாரர்களில் இவரும் ஒருவராவார். [6] இவ்வாறு, போர்ட் பிளேரில் உள்ள சிற்றறைச் சிறைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டதன் தனித்துவமான வேறுபாட்டை இவர் பெற்றுள்ளார். இவர் சிறையில் காசநோயால் பாதிக்கப்பட்டு கோரக்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் 1942 இல் இறந்தார்.

நம்பிக்கைகள் தொகு

இவரும் மகாத்மா காந்தியும் 1920 முதல் 1924 வரை யங் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு பிரபலமான விவாதத்தில் ஈடுபட்டனர். காந்தியின் படிப்படியான அணுகுமுறைக்கு எதிராக இவர் வாதிட்டதாகத் தெரிகிறது.

இவர் தனது உறுதியான இந்து நம்பிக்கைகளுக்காக அறியப்பட்டார். இருப்பினும் இவரைப் பின்பற்றுபவர்களில் சிலர் மார்க்சியவாதிகளும் இருந்தனர். இதனால் மதங்களை எதிர்த்தனர். பகத் சிங் சன்யாலின் நம்பிக்கைகளை தனது கட்டுரையான ஏன் நான் ஒரு நாத்திகன் ஆனேன் என்பதில் விவாதித்துள்ளார்.. ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி இவரது நெருங்கிய கூட்டாளியாவார். அந்த நேரத்தில் காங்கிரசின் ஆதரவாளராக இருந்த மௌலானா சௌகத் அலி என்பவர் மூலம்மற்றும் அதன் அகிம்சை இவருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. மற்றொரு முக்கிய காங்கிரசுகாரர் கிருட்டிணகாந்த் மாலவியாவும் இவருக்கு ஆயுதங்களை வழங்கினார். [7]

இறப்பு தொகு

இவர் பல பிரிட்டிசு எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படவில்லை. இதனால், இவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு, இவரது வாரணாசி சொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்தது. இவர் தனது இரண்டாவது தடவை சிறையில் இருந்தபோது இறந்தார்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு