சந்தனராசா

சகமான ஆட்சியாளர்

சந்தனராசா (Chandanaraja) (ஆட்சி 890-917பொ.ச.) சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னர். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தார்.

சந்தனராசா
சகமான மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 890–917 பொ.ச.
முன்னையவர்இரண்டாம் கோவிந்தராசன்
பின்னையவர்முதலாம் வாக்பதிராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைஇரண்டாம் கோவிந்தராசன்

இவர் தனது தந்தை இரண்டாம் கோவிந்தராசனுக்குப் (இரண்டாம் குவாகா) பிறகு சகமான மன்னராக ஆனார். இவர் வாப்பயராஜா என்றும் மாணிக்க ராய் என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டின் படி, சந்தன ருத்ரா (அல்லது உருத்ரேனா) என்ற தோமரா ஆட்சியாளரை தோற்கடித்ததாக அறியப்படுகிறது. வரலாற்றாசிரியர் தசரத சர்மா இந்த ஆட்சியாளரை தில்லியின் தோமரா வம்சத்தின் ஒரு மன்னருடன் அடையாளப்படுத்துகிறார்.[2] உருத்ரன் என்பது தோமரா ஆட்சியாளர் சந்திரபாலன் அல்லது பிபாசபாலனின் மற்றொரு பெயர் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் கருதுகிறார். [3]

இவரது ராணி ருத்ராணி அவளுடைய யோக சக்தியின் காரணமாக "ஆத்ம-பிரபா" என்றும் அழைக்கப்பட்டாள் என்று பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. அவள் புஷ்கர் ஏரிக்கரையில் 1,000 விளக்கு போன்ற இலிங்கங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. [3]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனராசா&oldid=3412164" இலிருந்து மீள்விக்கப்பட்டது