சிமன்பாய் படேல்

இந்திய அரசியல்வாதி

சிமன்பாய் படேல் (Chimanbhai Patel) (3 சூன் 1929 - 17 பிப்ரவரி 1994) இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், குசராத்து மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

சிமன்பாய் படேல்
தொகுதி சங்கேதா
5வது குஜராத் மாநில முதலமைச்சர்
பதவியில்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
முன்னவர் கண்சியாம் ஓசா
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி 1994
முன்னவர் மாதவசிங் சோலான்கி
பின்வந்தவர் சபில்தாஸ் மேத்தா
தனிநபர் தகவல்
பிறப்பு 3 சூன் 1929
சிகோதரா, வதோதரா மாவட்டம்
இறப்பு 17 பிப்ரவரி 1994
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஊர்மிளா படேல்
பிள்ளைகள் 3 மகன்கள்
இருப்பிடம் அகமதாபாத்
சமயம் இந்து சமயம்

அரசியல் தொகு

அமைச்சராக தொகு

சிமன்பாய் படேல் குஜராத் சட்டமன்றத்திற்கு சங்கேதா தொகுதியிலிருந்து 1967-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிதேந்திர தேசாய் அமைச்சரவையிலும், 1973-இல் கண்சியாம் ஓசா அமைச்சரவையிலும் இரண்டு முறை அமைச்சராக பணியாற்றியவர். 17 சூலை 1973-இல் குசராத் மாநில முதலமைச்சராக பதவியேற்ற சிமன்பாய் படேல், 9 பிப்ரவரி 1974 முடிய அப்பதவி வகித்தார்.

முதலமைச்சராக தொகு

சிமன்பாய் படேல் ஜனதா தள கட்சியில் இணைந்து, 4 மார்ச் 1990-இல் ஜனதா தளம்பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசிற்கு 4 மார்ச் 1990 முதல் 25 அக்டோபர் 1990 முடிய முதலமைச்சராக பதவி வகித்தார். இக்கூட்டணி அரசிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், சிமன்பாய் படேல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 17 பிப்ரவரி 1994 முடிய, இறக்கும் வரை குசராத் முதலமைச்சராக பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
கண்சியாம் ஓஜா
குஜராத் முதலமைச்சர்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
பின்னர்
பாபுபாய் படேல்
முன்னர்
மாதவசிங் சோலான்கி
குஜராத் முதலமைச்சர்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி1994
பின்னர்
சபில்தாஸ் மேத்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமன்பாய்_படேல்&oldid=3367375" இருந்து மீள்விக்கப்பட்டது