கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கூத்து என்பது நாடகம். கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
கூத்து என்பது நாடகம். கூத்தர் என்போர் நாடகம் ஆடுவோர். கூத்தர் பற்றிப் பண்டைய தமிழ்நூல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இவை.
==[[புறத்திணை|புறவாழ்க்கையில்]] கூத்தர் பங்கு==
கூத்தர் ஆங்காங்கே களம் அமைத்துக்கொண்டு கூத்தாடுவர். புறநானூறு 28 கூத்தாடும் அவர்களது அவைக்கு ஒவ்வொருவராக வருவர். கூத்து முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவர். <ref>கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வப் போக்கும் அது விளிந்து அற்று. – திருக்குறள்</ref> [[செங்குட்டுவன்]] கனக விசயரை வென்றபோது அவர்களின் பக்கம் இருந்து போரிட்டவர்கள் பல வகையான வேடமிட்டுக்கொண்டு போர்க்களத்திலிருந்து தப்பித்து ஓடினர். அந்த வேடங்களில் ஒன்று ஆடும் கூத்தர் வேடம். <ref>சிலப்பதிகாரம் 26-228</ref> உயிர் உடலில் ஆடும் கூத்தர் போல் விளையாடிவிட்டுப் போய்விடும். <ref>சிலப்பதிகாரம் 28-165</ref> [[புறத்திணை]] [[ஆற்றுப்படை]] நூல்களில் ஆற்றுப்படுத்தப்படும் மாந்தராக வருவர். <ref>தொல்காப்பியம் புறத்திணையியல் 30</ref> [[மலைபடுகடாம்]] நூலைக் கூத்தர் ஆற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
 
==[[அகத்திணை|அகவாழ்க்கையில்]] கூத்தர் பங்கு==
கற்புநிலை ஒழுக்கத்தில் கூத்தரின் பங்கு இன்னதெனத் [[தொல்காப்பியம்]] தொகுத்துக் காட்டுகிறது. தொல்காப்பியம் கற்பியல் 27 தலைவன் வேறொரு நாட்டுக்குச் சென்றிருக்கும்போது அவன் எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுவந்து தலைவிக்குக் கூறுவர். தொல்காப்பியம் கற்பியல் 28
"https://ta.wikipedia.org/wiki/கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது